Pages


running letters

drums sivam

mGinger

Thursday 18 August 2011

potaot electricity


Potato Power: Teacher's Guide

Introduction

In this activity, you will learn how to build a battery from potatoes. Along the way, you will answer the following questions:

  1. How does a battery work?
  2. What is current?
  3. What is voltage?
  4. What happens when you put two batteries in series?
  5. What happens when you put two batteries in parallel?

You will then use what you have learned to design a potato battery to light two LEDs (Light Emitting Diodes). I will tell you now, the two LEDs need 1.6 volts and 2 milliamps. What does that mean?! You will find out...

Background

The battery was invented around 1800 by Alessandro Volta in Italy. It has become an indispensable part of modern life. Wherever you look, you�ll find devices that use batteries.

Why are batteries so useful? Because they convert chemical energy into electrical energy. You can use this electrical energy to light a flashlight, to start a car, or to listen to your favorite music.

You can make a simple battery by placing a zinc strip and a copper strip in an acid. At the zinc strip, the acid dissolves the zinc freeing electrons. At the copper strip, the acid uses those electrons to form hydrogen gas. Because the zinc strip frees electrons and the copper strip uses electrons, if you put a wire between the two strips, then electrons will flow from the zinc to the copper. This is electrical energy.



Pre-Activity

Done before the class as an introduction to batteries and the chemical reactions going on.

Need two 500 mL beakers, vinegar, 2 copper strips, 2 zinc strips, and low current LED. Hook up the beakers and strips as 2 batteries in series and attach the LED. Half fill the beakers with water. Show that the LED is dimly lit. Add vinegar, representing free protons, to the beakers and show that the LED is now brightly lit.

Materials

  • metal strips: copper, aluminum, zinc (galvanized steel)
  • potatoes (at least 4)
  • multimeter (volts, milliamps)
  • wire clips
  • steel wool (to clean the metal strips)

Simple Potato Battery

  1. Select two different metal strips and one potato.
  2. Carefully place the metal strips into the potato.

Congratulations! You have just made a battery! Simple, yes? Now you will learn about your battery.

At this point, you may be wondering, What is the acid in the potato? What is causing a chemical reaction? The explanation is:
1. the potato has a mild phosphoric acid content H3PO4
2. reduction at Cu (copper) electrode:
2H+ + 2e- -> H2 gas
3. oxidation at Zn (zinc) electrode:
Zn -> Zn++ + 2e-

The H3PO4 acid puts the hydrogen ions in solution. So basically, the phosphoric acid in the potato acts like the acetic acid (vinegar) that we used in the pre-activity.

Voltage

  1. Set the meter to "DC Volts" and make sure the probes are plugged into the correct jacks. Also make sure that the scale is correct. All multimeters are different, but there should be a low scale, something like 2V, or 6V.
  2. Attach wires from the meter's probes to the metal strips.
  3. What does the meter read? (enter on the worksheet)

Remember that in a battery, one metal strip is becoming positive and the other negative. Voltage is a measure of this charge difference. It is measured in units called "volts", named after the inventor of the battery.

Voltage is a lot like a hill. A hill is due to a height difference. Voltage is due to a charge difference. Say you roll a ball down a hill. The higher the hill, the faster the ball will go. A ball rolling down a high hill has more energy than a ball rolling down a low hill. In the same way, an electron going across a large voltage has more energy than an electron going across a small voltage.

Current

  1. Set the meter to "DC milliamps" and make sure the probes are plugged into the correct jacks. (Use the smallest setting on the multimeter.)
  2. Attach wires from the meter's probes to the metal strips.
  3. What does the meter read? (enter on the worksheet) (You may notice that the current decreases. As the current decreases, you are draining the battery. So take your measurement, then disconnect the wires.)

Remember that in a battery, electrons are leaving one metal strip and flowing to the other strip. Current is a measure of how many electrons are flowing in time. It is measured in units called "amps", but because our currents are so small, we use milliamps (1/1000 of an amp).

Electron current is a lot like a stream. A stream is the flow of water. Electron current is the flow of electrons.

Different Metals

Now that you know how to make a potato battery, and know what voltage and current are, you will try to make a better battery.

Some metals make better batteries than others. You will try to find the combination of metals that gives the most voltage and current.

What combination of metals made the most voltage and current together? (circle it on the worksheet)

From now on, use this best combination of metals in making batteries.

Potatoes in Series

  1. Make another potato battery.
  2. Wire up the two potatoes in series, as shown below.
  3. Think about voltage as the height of a hill. What do you predict the total voltage will be? (What would the total height be if you put two hills in series?) (enter on worksheet)
  4. Measure the voltage of the two potatoes in series. (enter on worksheet)
  5. How does this voltage compare to the voltage produced by just one potato?
  6. Think about current as a stream. What do you predict the total current will be? (What would the total current be if you put two streams in series?) (enter on worksheet)
  7. Measure the current of the two potatoes in series. (enter on worksheet)
  8. How does this current compare to the current produced by just one potato?

Potatoes in Parallel

  1. Wire up the two potatoes in parallel, as shown below.
  2. Think about voltage as the height of a hill. What do you predict the total voltage will be? (What would the total height be if you put two hills in parallel?) (enter on worksheet)
  3. Measure the voltage of the two potatoes in parallel. (enter on worksheet)
  4. How does this voltage compare to the voltage produced by just one potato?
  5. Think about current as a stream. What do you predict the total current will be? (What would the total current be if you put two streams in parallel?) (enter on worksheet)
  6. Measure the current of the two potatoes in parallel. (enter on worksheet)
  7. How does this current compare to the current produced by just one potato?

Light the LEDs

Now you are qualified to be a battery engineer! Your job is to design a more complicated potato battery to light two LEDs.

Two LEDs need 1.6 volts and 1 milliamp to light brightly. The more current, the brighter the light. By putting potatoes in series and parallel, design a battery to do this:

Now test your battery with the LEDs. LEDs are special lights that have a positive side (red wire) and negative side (black wire). Make sure you attach the positive side of your battery to the red wire and the negative side to the black wire.

Notes

  • The best combination of metals should be copper and zinc.
  • The LEDs used here are special low current LEDs, rated for 1.8 V and 1 mA, but they will fire at about 1.6 V and .2 mA.
  • One LED should fire with 2 potatoes in series (this barely produces the needed 1.6 V), but you may need 3.
  • The 2 LED eyes are wired in parallel. Four potatoes should brightly light the eyes: two pairs in series, those pairs in parallel.
  • The zinc used here is really galvanized steel, meaning zinc coated steel. Zinc is dissolved from the strips in the battery, so the metal strips have a finite lifetime.
  • Do not eat the potatoes afterwards!













Make a Battery from Potato
Introduction:
Batteries generate electricity through a chemical reaction between two different electrodes and one electrolyte. Use of Copper and Zinc electrodes and Sulfuric acid as electrolyte is a proven method for this process. We are wondering if we can use any other liquid as electrolyte? This gave us the idea of using a potato as electrolyte. After all a fresh potato has a lot of juice that may serve our purpose as electrolyte.
Problem:
Can Potato be used to generate electricity?
Hypothesis:
Potato juice contains many water soluble chemicals that may cause a chemical reaction with one or both of our electrodes. So we may get some electricity from that.
 
Material:
For this experiment we use:
  • A fresh potato
  • Copper Electrode
  • Zinc Electrode
  • A Digital or Analog Multimeter to measure Voltage or Current of produced electricity.
  • Alligator clips/ Leads

Procedure:
We insert copper and zinc electrodes in to the potato, close but not touching each other. We use Clip leads to connect our electrodes to the Multimeter to measure voltage between two electrodes or current passing through the multimeter. For this experiment we removed the shell of a broken AA battery for our Zinc electrode. (Make sure to test your multimeter by connecting its Positive and Negative wires to each other that should show no current and no voltage).
 
 Record And Analyze Data:
A digital multimeter showed 1.2 volts between the electrodes, but the analog multimeter showed a much smaller value. In other words even though the voltage between electrodes is 1.2 Volts, the speed of production of electricity is not high enough for an analog multimeter to show the exact voltage. (Analog multimeter gets its power from our potato to show the voltage, but digital Multimeter gets its power from an internal battery and does not consume any of the electricity produced by our potato, that is why it shows a larger and more accurate value).
We repeated this experiment with some other fruits and all resulted almost the same. In all cases the produced voltage is between 1 and 1.5 volts, and in all cases they do not produce enough current to turn on a small light.
 Another thing that we learned from this experiment is that creating electricity and making a battery is easy, the main challenge is producing a battery that can continue to produce larger amount of electricity for larger amount of time.
By connecting multiple potato batteries you can make enough electricity to light-up a super bright light emitting diode (Included in the kit)

Tuesday 16 August 2011

ஊழல் ஒழிப்பில் உங்கள் பங்கென்ன? தினமலர் வாசகர்களே ஆதரவு கரம் கொடுப்பீர்

வல்லரசு என்ற வானளாவிய சிகரத்தை எட்டுவதற்கான நம் பயணத்தில், மாபெரும் தடைக்கல்லாய் எழுந்து நிற்கிறது ஊழல். கையூட்டு, லஞ்சம், ஊழல் என வெவ்வேறு வடிவங்களில் சுற்றிச் சுழன்று நம்மை வீழ்த்தும் இந்த காரணிகளிலிருந்து நம் தேசத்தைக் காக்க வேண்டிய மகத்தான கடமை, நமக்கிருக்கிறது. அதிலும் நம் தமிழகத்துக்கு இப்போது அந்தப் பொறுப்பு, ரொம்பவே அதிகரித்திருக்கிறது; அதற்காக ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான லோக்பால் மசோதாவை உடனடியாக நிறைவேற்றக் கோரி, காந்திய தொண்டர் அன்னா ஹசாரே டில்லியில் துவக்கியுள்ள அகிம்சைப் போராட்டத்துக்கு, தேசம் முழுவதும் ஆதரவு அலை பெருகி வருகிறது. தமிழகத்திலிருந்தும் ஹசாரேக்கு ஆதரவாக பல கோடி கரங்கள் நீள்கின்றன.
நாட்டையே தூய்மைப்படுத்தும் இந்த போராட்டத்தில் உங்கள் பங்‌கென்ன? தினமலர் வாசகர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ எழுதி புகைப்படத்துடன் அனுப்பினால் அதை வெளியிடத் தயாராக இருக்கி‌றோம். பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தை உங்கள் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். அது குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள். ஊழல் ஒழிப்பிற்கு நம்மால் இயன்ற கட‌மையைச் செய்வோம்.

anna hazare




The Jan Lokpal Bill (Citizen's ombudsman Bill) is a draft anti-corruption bill drawn up by prominent civil society activists seeking the appointment of a Jan Lokpal, an independent body that would investigate corruption cases, complete the investigation within a year and envisages trial in the case getting over in the next one year.

Drafted by Justice Santosh Hegde (former Supreme Court Judge and former Lokayukta of Karnataka), Prashant Bhushan (Supreme Court Lawyer) and Arvind Kejriwal (RTI activist), the draft Bill envisages a system where a corrupt person found guilty would go to jail within two years of the complaint being made and his ill-gotten wealth being confiscated. It also seeks power to the Jan Lokpal to prosecute politicians and bureaucrats without government permission.

Retired IPS officer Kiran Bedi and other known people like Swami Agnivesh, Sri Sri Ravi Shankar, Anna Hazare and Mallika Sarabhai are also part of the movement, called India Against Corruption. Its website describes the movement as "an expression of collective anger of people of India against corruption. We have all come together to force/request/persuade/pressurize the Government to enact the Jan Lokpal Bill. We feel that if this Bill were enacted it would create an effective deterrence against corruption."

Anna Hazare, anti-corruption crusader, went on a fast-unto-death in April, demanding that this Bill, drafted by the civil society, be adopted. Four days into his fast, the government agreed to set up a joint committee with an equal number of members from the government and civil society side to draft the Lokpal Bill together. The two sides met several times but could not agree on fundamental elements like including the PM under the purview of the Lokpal. Eventually, both sides drafted their own version of the Bill.

The government has introduced its version in Parliament in this session. Team Anna is up in arms and calls the government version the "Joke Pal Bill." Anna Hazare declared that he would begin another fast in Delhi on August 16. Hours before he was to begin his hunger strike, the Delhi Police detained and later arrested him. There are widespread protests all over the country against his arrest.        

The website of the India Against Corruption movement calls the Lokpal Bill of the government an "eyewash" and has on it a critique of that government Bill.

A look at the salient features of Jan Lokpal Bill:

1. An institution called LOKPAL at the centre and LOKAYUKTA in each state will be set up

2. Like Supreme Court and Election Commission, they will be completely independent of the governments. No minister or bureaucrat will be able to influence their investigations.

3. Cases against corrupt people will not linger on for years anymore: Investigations in any case will have to be completed in one year. Trial should be completed in next one year so that the corrupt politician, officer or judge is sent to jail within two years.

4. The loss that a corrupt person caused to the government will be recovered at the time of conviction.

5. How will it help a common citizen: If any work of any citizen is not done in prescribed time in any government office, Lokpal will impose financial penalty on guilty officers, which will be given as compensation to the complainant.

6. So, you could approach Lokpal if your ration card or passport or voter card is not being made or if police is not registering your case or any other work is not being done in prescribed time. Lokpal will have to get it done in a month's time. You could also report any case of corruption to Lokpal like ration being siphoned off, poor quality roads been constructed or panchayat funds being siphoned off. Lokpal will have to complete its investigations in a year, trial will be over in next one year and the guilty will go to jail within two years.

7. But won't the government appoint corrupt and weak people as Lokpal members? That won't be possible because its members will be selected by judges, citizens and constitutional authorities and not by politicians, through a completely transparent and participatory process.

8. What if some officer in Lokpal becomes corrupt? The entire functioning of Lokpal/ Lokayukta will be completely transparent. Any complaint against any officer of Lokpal shall be investigated and the officer dismissed within two months.

9. What will happen to existing anti-corruption agencies? CVC, departmental vigilance and anti-corruption branch of CBI will be merged into Lokpal. Lokpal will have complete powers and machinery to independently investigate and prosecute any officer, judge or politician.

10. It will be the duty of the Lokpal to provide protection to those who are being victimized for raising their voice against corruption

Sunday 14 August 2011

மதுரை திருமலைநாயக்கர் மகால்


மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சூட்டிங் நடத்த தடை

தற்போதைய செய்தி
மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சினிமா சூட்டிங் நடத்த இடைக்கால தடைவிதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் நகரான மதுரைக்கு பல்வேறு சிறப்புகள் ஒன்று. அவற்றுள் மதுரை திருமலைநாயக்கர் மகாலும் ஒன்று.
மன்னர் திருமலைநாயக்கரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஆண்டுகள் பல கடந்து இன்றும் அதன்பெருமையை பறைசாற்றி வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தொடர்ந்து இங்கு நடந்து வரும் சினிமா சூட்டிங் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் மகால் பொலிவிழந்து காணப்படுகிறது.
இதனை எதிர்த்து மதுரை அண்ணாநகரை சேர்ந்த, முத்துக்‌குமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (11.08.11) நடந்தது. இதில் மகாலில் சினிமா சூட்டிங்கை நடத்த தற்காலிக தடைவிதிப்பதாகவும், மேற்கொண்டு மகாலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழ்மொழியின் சிறப்புகள்


தமிழ்மொழியின் சிறப்புகள்


தமிழால் வளர்ந்தேன் - தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம் .என் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன் .என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும் .

தமிழின்  சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள் ,வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும்  உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான் .

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை ,எளிமை ,நீர்மை என்பதாகும் .

தமிழில் பகுபதம் ,பகாப்பதம் என இரண்டு வகை உண்டு .அவை  பிரித்துப்பார்க்க வேண்டியவை ,பிரித்துப்பார்க்க கூடாதவையாகும் . 

உதாரணமாக கடவுள்(கட + உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல . நீ ஆசைகளை ,பந்த பாசங்கள்  எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும் .

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை .கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர் .வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது .இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில்  பாருங்கள் .உங்களுக்கே புரியும் .


இது சிறிய அளவின்  பிரிவுகள் .

1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

இந்த இம்மியளவும் அசையாது என்று நம்  பேச்சு  வழக்கில்  பேசும் சொல்.

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு .பட்டியலை பார்க்க 

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும்  முடியாது . 

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது  .

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு(ப் +உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே  சொல் தான் . LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும் . 

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள்  எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்).தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை . உச்சரித்து பாருங்கள் .அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள் . 

டாக்டர்  கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள் ,திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள் .கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார் .

முக்கியமாக இந்த "கற்க்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக "எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது . இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும் .

3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது  என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள் . 

சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு  மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா  வளர்ந்தது .

முக்கியமாக சீனாவின் துயரம் மஞ்சள் நதி ,இந்தியாவின் துயரம் பிராமணர்கள் என்று புதுதாக சேர்த்துள்ளனர் சிலர் அதே போல....

தமிழர்களின்/தமிழின் துயரம்:- 
அரசியல் 
சினிமா 
மதம்/ஜாதி    

மேலே உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்பதை காட்டுகிறது .ஆனால் நாம் ? 
"யாதும்  ஊரே யாவரும்  கேளிர்" என்ற உலக பொது நியதியை கொண்ட ஒரே மொழி இத்தகைய தமிழில் பிறந்து தமிழால் வளர்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம் 


உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை
- ஞா.தேவநேயப் பாவாணர்

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்’ எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

அக்கால மக்கள் வீர வாழ்க்கையையும் கொடைச் சிறப்பையும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்றாக திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையுமாகும். பிற மொழிகளில் இல்லாத அளவிற்கு தமிழில் மலையளவு அறநூல்கள் உள்ளன. ஆழ்ந்து அகன்று தேடினாலும் திருக்குறள் போல் வேறு மொழிகளில் அறநூலுண்டோ?.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

‘இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்’ - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல்

‘தமிழ்’ என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழ’வைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ’ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

“தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,
“ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்”
என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.


தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந்துரைக்கின்றார்.
“ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
பாரதிதாசன்,
“ தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”

என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்

விண்டோஸ் XP சில டிப்ஸ்


விண்டோஸ் XP சில டிப்ஸ்


விண்டோஸ் XP-ல் நாம் அதிகமாக Graphical User Interface Mode-ல் தான் வேலை செய்து இருப்போம். இங்குள்ள Commend-கள் Command Prompt-ல் வேலைசெய்ய கூடியவை.

அதே போல இவை (Command) அனைத்தும் முக்கியமான பயன்பாட்டிற்கு உதவும் Shortcut வழிமுறைகள் ஆகும்.


Shortcut Run Commands

1). View Full Specifications Of Your PC.

> Go to Run:
> type: dxdiag 
> press enter
Then you can view all pc specifications.

2). To Monitor Your Computer's Performance
> Go to Run:
> type: perfmon.msc 
> press enter

3). Do you have any problems in Network Connections? 
> Go to Run:
> type: ncpa.cpl
> press enter
A window will open with full details of your Network Connections.


4). Your Name in Task Bar: 
 
> Start
> Control Panel
> Regional & Language Options
Customize
> Time
> AM Symbol
- Enter name


5). Just Clear Your All Internet activity history. 
> Go to Run:
> type: inetcpl.cpl

and hit ok to clear browsing history,cookies & offline data.


6). Ad or Remove Programs 
> Go to Run:
> type: appwiz.cpl


7). Prevent Any Software From Running on Startup 

> Go to Run: 

> type: msconfig 
> select startup tab
> uncheck
> apply

8). Opening Add Hardware Window in Run

> Go to Run:
> type: hdwwiz.cpl



9). Disable CD Autorun 

1) Click Start, Run and enter GPEDIT.MSC 


2) Go to Computer Configuration, Administrative Templates, System. 


3) Locate the entry for Turn autoplay off and modify it as you desire.


10). How to Convert a FAT Partition to NTFS 


To convert a FAT partition to NTFS, perform the following steps. 


Click Start, click Programs, and then click Command Prompt. 


In Windows XP, click Start, and then click Run. 


At the command prompt, type 
  CONVERT [driveletter]: /FS:NTFS. 

Convert.exe will attempt to convert the partition to NTFS.


11). Ping 
 
 how to continuously ping a host until stopped. Here are all of the ping options:

example .. In DOS .. c:>    
ping 192.168.0.1 -t 

-t Ping the specifed host until interrupted 


-a Resolve addresses to hostnames 


-n count Number of echo requests to send 


-l 
size Send buffer size

-f Set Don't Fragment flag in packet 


-i TTL Time To Live 


-v TOS Type Of Service 


-r count Record route for count hops 


-s count Timestamp for count hops 


-j host-list Loose source route along host-list 


-k host-list Strict source route along host-list 


-w timeout Timeout in milliseconds to wait for each 
reply

Experiment to see how helpful these can be!



12) To Rename Multiple Files At Once (GUI Mode) 


* select all(ctrl+a) 


* press F2(rename) 


* type name 


* press enter

விண்டோஸ் 7



விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:

ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம்.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது.

டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.


2.விண்டோக்களைக் கையாளுதல்:

விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது. செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும்.

விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும். பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.

இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.


3. பல மானிட்டர் செயல்பாடு:

ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.


4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:

விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.


5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:

நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது.

விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.


6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:

என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.

இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.


7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:

வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது.

அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது


Read more: http://therinjikko.blogspot.com/2011/03/7.html#ixzz1UzD8dZL2

தேள்கடி


தேள்கடி

இங்கே நான் பேசபோகும் தேள்கடி, வாரமலர் துணுக்கு பகுதிலே வருகிற தேள்கடி அம்மா பற்றி இல்லை. (இது 1990 களில் வாரமலர் படித்தவர்களுக்கு தெரியும், சரி சுச்பென்ஸ் வேண்டாம் -நான்  டிஸ்கோ சாந்தி பத்தி பேசலே). இது நிஜமா நானும் என்னோட நண்பன் கட்டை மாப்பிளையும் வாங்கின தேள்கடி
பத்தி பேசபோறேன்.  பாரதியார் பல்கலையில் கல்வி கத்துகிட்டு இருந்தோம் அப்போ,  1997-98 நு வச்சுகொங்கோ, நாங்க தங்கி இருந்த விடுதியை சுத்தி புதர்கள், கடு தான், மருதமலை அடிவாரம், அப்போ அப்போ தண்ணிய தேடி யானைகள் தொண்டாமுத்தூர் வரத்தும் உண்டு. மழை காலங்களில் நெறிய பாம்பு, தேளு எல்லாம் வரது உண்டு. அதிலே சில வணங்காமுடிங்க தவளைய பிடிக்க வர சரைபாம்ப அடிச்சு ரோட்டுலே போட்டு பயத்தகூட்டுவணுக. எல்லாம் ஊட்டிலே இருந்து வந்த நம்ப மலைமக்கள் தான். கோவைக்கும் இவங்களுக்கும் நல்ல தொடர்பு, நல்ல டீ இலை வெலைக்குபோச்சுன்ன கார் எடுத்துட்டு சேரன் டவேர்ச்கு முடிவெட்ட வருவானுக.
எங்க தோழன் ஒருத்தன் பொறந்த நாள் அன்னைக்கு கொஞ்சமா சரக்கு அடிச்சுட்டு, ஹாஸ்டல் மெஸ் லே சாப்ட்டுட்டு பசங்க வெளிய வந்து, வரண்டாலே நின்னுகிட்டு பொகைபோட தயார் ஆனாங்க நம்ப பசங்க. 
நான், பிளாஸ்மா ராம்ஸ், செட்டி சரவணன், கட்டை மாப்பிள்ளை, வாத்தியார் ரமேஸ், பாலிடிக்ஸ் செங்கிஸ், சாமி, RTR, சண்முகம், எல்லோரும் நின்னுகிட்டு இருந்தோம். திடிர்னு என்னோட கால்லே எதோ
நெருப்பு கங்கு பட்ட மாதிரி சுட்டுச்சு, கலை உதறிட்டு பார்த்தா காலுக்கு கீழ ஒரு கருந்தேள் கெடந்துச்சு, குச்சி எடுத்து தள்ளி பார்த்தா செத்து கெடந்துச்சு. என்னை தேள் கடிச்சுடுசுனு, பசங்களுக்கு ஒரே சந்தோசம், ஆபத்பாந்தவன் அசோக் பைக்லே ஏத்திகிட்டு கல்வீரம்பட்டிலே இருக்கிற மந்திகிரவங்ககிட்டே கூட்டிடுபோயி மந்திரிச்சு ரூம்க்கு வந்து தூங்கிட்டேன். கட்டை மாப்பிள்ளை அடுத்த இரண்டு வாரத்துக்கு" டேய், நி எல்லாம் ஒரு ஆளாடா? தேளு உன்னை கடிச்சு செத்து போயிடுச்சு, பார்த்துடா, யாரையும் கொட்டிடதேனு ஒட்டிகிட்டே இருப்பான். 

இது நடந்து ரெண்டு மூணு வரம் கழிச்சு, எப்போவும் போல ராத்திரி போடறே ஊத்தாப்பம் சாப்ட்டுட்டு, வேலிய தாண்டி, ஆலமர பஸ் ஸ்டாப் லே இருக்ற தாத்தா கடைக்கு கல்லைமுட்டாய், வாழைபழம் சாப்பிட்ட பிளாஸ்மா ராமசாமியை சரிபண்ணி, நான், கட்டை மாப்பிளை, வாத்தியார் ரமேஷ், எல்லோரும் போனோம், திரும்பி வரும் போது
நம்ப கட்டை மாப்பிளை கால ஒரு கருந்தேள் கொட்டிடுச்சு, மறுபடியும், ஆபத்பண்டவன் அசோக் அவனே கூட்டிகிட்டு கல்வீரம்பளையம் போயி மந்திரிசுகிட்டு வந்து தூங்கிட்டான். அடுத்தநாள் கலையிலே பார்த்தா நம்ப கட்டை மாப்பிள்ளை காலு பூரி மாதிரி வீங்கி இருந்துச்சு, உடனே R.S.  புரத்திலே இருக்கிற நல்ல ஆசுபதிரிக்கி கூடிட்டுபோனோம், ஒரு மூணு நாள் வச்சு வைத்தியம் பார்த்து அவனே வீட்டுக்கு அனுப்பினாங்க, இப்போவும் நம்ப கட்டை மாப்பிள்ளை சொல்லுவான்,
ஏண்டா உன்னை கடிச்ச தேளு செத்துப்போச்சு, நீ எல்லாம் "ஒரு ஆளாடா?

ஹஹஹஹஹா, நம்ப கட்டை மாப்பிள்ளை இப்போ கொரியாலே பிசிக்ஸ் சொல்லிகொடுதுட்டு இருக்கான்

இமய மலை





கடந்த சில வருடங்களாக "இடற்மேற்கொண்டாலும் இன்னல்கள் பல வந்தாலும் இறைவனை காணும் பணிமேற்கொள்வோம்" என்று செல்லும் அனைவருக்கும் ஒரு ஏமாற்றம். ஆம் திருவுருவம் தலை சிறுத்தும் தனை மறைத்தும் தன்னை கான வரும் பக்தர்கள் தனை ஏமாற்றி விட்டார்.

இருப்பினும் பக்தர்கள் இறைவனை மறவாமல் "ஆயிரம் இடற்வந்தாலும் உன்னை கண்டு இப்பிறவியின் பயனை அடைவோம்" என கால் கடுக்க பனி மலையேறி வந்த வண்ண மிருக்க தொண்டருள் உள்ளத்து உறையும் இறைவனவன் இளகி விட்டான். தன்னுடைய விஸ்வரூபத்தை சுமார் 70 ஆண்டுகள் கழித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பனிநாதனாகி நிற்கின்றான்.

ஆம் அமர்நாத் பனிலிங்கம் சில ஆண்டுகளாகவே விவாதத்திற்குட்பட்ட பொருளாகிவிட்டது. 1999 க்கு பிறகு பல பக்தர்களுக்கு சரளைக்கல் மேடாக காட்சி யளித்தான். கடந்த வருடம் பெரும் சர்ச்சை பொருளாகிவிட்டான். அமர்நாத் குகை பனி லிங்க கோவில் நிர்வாகம் பக்தர்களை ஏமாற்ற கார்பன் டை ஆக்ஸைடு பனிகட்டியை லிங்கமாக வைத்து ஏமாற்றியது எனவும் செய்திகள் வந்தன.

மேலும் தீவிரவாதிகளில் அச்சுருத்தல் வேறு 2000மற்றும் அதன் பிறகு வந்த‌ வருடங்களில் தீவிரவாதியின் தாக்குதல்களில் 3 டசன் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் லிங்கம் விரைவில் கரைவதற்கும் சில வருடங்கள் தோன்றாமல் போவதற்கும் சில காரணங்கள் பரவியது. அதிக பக்தர் வருகைவாசனை பக்தி பொருள்கள் அதிகம் வைத்தல்புவியின் வெப்பம் அதிகமாகுதல்எலிகாப்டர் அடிக்கடி அங்கு வர அதன் அதிர்வில் லிங்கம் உருவாகாமல் போதல் என பல யூகங்கள்

இம்முறை அத்தனை யூகங்களுக்கும் அடிமுடிகாண அசுதோசன் அயர்ந்துவிடவில்லை எப்பொழுதுமில்லாமல் இம்முறை 12 அடிக்கு உயர்ந்து அதற்க்கும் மேலாக உயர்ந்து நிற்க்கின்றான். அப்பழுக்கில்லா அம்மையப்பன்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு சண்டிகரை சேர்ந்த ஒரு பக்தர் எடுத்த புகைப்படத்தில் கடைசியாக இந்த விஸ்வரூபத்தில் பக்தர்களுக்கும் காட்சியளித்தான். அந்த வருடத்தில் உலக போர் நின்றது. ஐக்கிய நாடுகள் சபை உதித்தது.


இம்முறை அதைவிட பெரிதாக விஸ்வரூபமெடுத்துள்ளார்விஸ்வேஸ்வரன் இம்முறை உலகிற்க்கு என்ன சொல்ல வருகிறான். மீண்டும் அமைதியிழந்த உலகிற்கு அதர்மத்தை ஓட்டி ஆட்சி செய்யபோகும் குறிக்கொள் கொண்டு வந்துள்ளானா இந்த கேள்வி உலகின் அமைதிக்காக இறைவனை வேண்டும் நல்ல உள்ளங்கள் பலவற்றில் எழும் ஒரு கேள்வி இதற்க்கு காலதேவன் பதில் சொல்வான்.

ஆம் வரும் 18 ஆம் திகதி முதல் புனித அமர்நாத் குகைக்கொவில் பனிலிங்க தரிசனம் ஆரம்பிக்க உள்ளது.

தீவிரவாதிகளின் அச்சுருத்தல்களின் காரணமாக பலத்த காவல் ஏற்ப்பாடு சுமார் 32 பட்டாலியன் இராணுவ‌ துருப்புக்களுடன் எல்லை காவல் படை,இராணுவ போலீஸ்இவர்களுடன் ஜம்மு மாநில போலீஸாரும் பக்தர்களின் துணை நிற்க "பம் பம் போல" "ஹர் ஹ்ர் மகாதேவ்" என்ற கோசங்கள் மலைமுழுவதும் எழும்ப தொண்டருக்கு தொண்டராக விளங்கும் இமயவரம்பனை காண புற‌ப்பட்டு விட்டார்கள் பக்தர்கள்.

இவ்வருடம் சுமார் இரண்டு இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என கணிக்க பட்டுள்ளதாக ஜம்மு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

கயிலை நாதனின் இருப்பிடம் இமயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் பள்ளத்தாக்கும் அதில் வழிந்து வரும் நீரோடைகளும் மகேஸ்வரனின் தாண்டவத்தில் பரந்து திகளும் சடாமுடியும் அதன் அதிர்வில் பொங்கும் கங்கையும் தான் அந்த காட்சியை காணும் போது நமது கண்களில் தெரிகிறது.

இமய மலையின் ஆரம்ப அடுக்குகளின் இதய பகுதியில் அமைந்துள்ளது அமர் நாத் பனிலிங்க குகைக்கோவில் இங்கு செல்ல இரயில் விமாணம் மூலம் டில்லி வந்தடைந்துஅங்கிருந்து ஜம்மு வரலாம்.





நேரிடையாக ஜம்முவிற்க்கு இரயிலின் மூலமும் செல்லாம். திரு நகரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரமுள்ள பாகல் காவ்( பைதல் காவ் என்று போருள் மருவி பாகல் காவ் என்றாகிவிட்டது) பைதல் என்றால் இந்தியில் நடைபயணம் என்று பொருள். முன்பு இங்கிருந்துதான் அமர்நாத் குகைக்கு நடைபயணம் மேற்கொள்ள பட்டது.

தற்போது சந்தன் வாடி வரை வண்டிகளின் பயணம் விரிவு படுத்த பட்டுள்ளது. ஆனால் சிரி நகர் பொது பேரூந்துகள் பாகல் காவ் வரைதான் செல்லும் வசதி குறைந்த பக்தர்கள் இங்கிருந்தே இன்றும் நடை பயணம் மேற்கொள்வர்.



பாகல் காவ் இறங்கியவுடன் நம்மை வரவேற்ப்பது ஈரமான சூழல் தான். ஆம் வருன பகவான் நம்மை எப்பொழுதும் வரவேற்க்க தயாராக இருப்பான் போலும் இறங்கிய உடனும் மழைநீர் சொரிந்து வரவேற்பான். இல்லை என்றால் சிறிது இளைப்பாரவிட்டு மழை நீரில் நனைத்து விடுவான்.

இங்கு நாம் இறங்கியவுடன் நம்மை சூழ்ந்து கொள்பவர்கள். டோலி தூக்குபவர்கள்(பல்லக்கு) கோவேறு கழுதை உரிமையாளர்கள். ஆம் இவர்கள் தாம் பயணத்தில் நமது உறவுகள்.உங்களால் நடக்க முடியுமென்றால் இவர்களின்

அன்பான விண்ணப்பங்களை தவிர்த்து விடலாம்.





இவர்கள் ஊடாக சில ஏமாற்று பேர்வழிகளும் உண்டு. கவணம் தேவை

பாகல் காவில் உள்ள கூடாரங்கள் அனைத்து வசதிகளும் கொண்டவை காலை கடன் மற்றும் குளியல் முடிந்தவுடன் அதிகாலை உணவான தடிமனான இருப்பினும் மிகவும் மிருதுவான குழந்தைகளும் சப்பிடும் அளவிற்க்கு மிருதுவான சுட்ட‌ ரொட்டி கூடவே நாட்டு கொண்டைகடலை,உழுந்து குருமாக்கள். 15 முதல் இருபது ரொட்டிக்கள் சாப்பிட்டாலும் நமக்கு மனம் கொள்ளாது ஆனால் வயிற்றில் தான் இடம் வேண்டும்  இவை இலவசமாக கிடைக்கும்

பூரி உருளைக்கிழங்கு குருமாக்களும் உண்டு இவை குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் கால்கள் எப்பொழுதும் ஈரநிலத்தில் இருக்கவேண்டிய சூழல் ஆதலாம் யாத்திரை செல்பவர்கள். உலர் துண்டுகள்(பேப்பர் டவல்) பேப்பர் நாப்கின் போன்றவற்றை நிறைய எடுத்து செல்ல வேண்டும்.

வழியில் ஓய்வெடுக்கும் போது பாறைகளில் அமர்ந்து பாடங்களை உலர வைத்து கொள்ள உதவும். முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள்மினரல் வாட்டர் பாட்டில்களை எடுத்து செல்வதை தவிருங்கள். குகைப்பாதையின் சுற்றுபுறத்தை காக்கும் கடமை நமக்குண்டு.
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான ஓடை நீர் இருக்க நமக்கு ஏன் மினரல் வாட்டர்??

குழுவின‌ரின் முன்பு சாமியார்க‌ள் ச‌ங்கு ஊத‌ ந‌ம‌து ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து. "ஹ‌ர் ஹ‌ர் ம‌ஹா தேவ்" "ஜ‌ய் போலே நாத்" "ப‌ம் ப‌ம் போலெ" "போலேநாத்கி ஜெய்" என‌ ப‌ல‌ கோச‌ங்க‌ளுட‌ன் ப‌ய‌ண‌ம் புற‌ப்ப‌டுகிற‌து.
 
சிறிது துரம் ஆங்காங்கே அமர்ந்திருக்கும் வியாபாரிகள் தூரம் செல்ல செல்ல காணாமல் போய்விடுவார்கள். இனி நமக்கு கண்ணில் படுவது பனி மூடிய சிகர‌மும் பசுமை விரித்த பள்ளத்தாக்குகளும் தூரத்தில் மேயும் ஆட்டு கூட்டங்களும் வழியில் பாதுபாப்பு படையினரின் கூடாரங்களும் தான்.

மற்றவை நம்முடன் வரும் பக்தர்களின் நமச்சிவாய நாமம் தான்

மதியம் வெயிலிள்ளாமல் மேகமூட்டம் தான் அதிகம் காணபட்டாலும் பயணம் தடையில்லாமல் சென்று கொண்டிருக்கும் அதிக நேரம் யாரையும்  வெட்ட வெளியில் பாதுகாப்பு படையினர் திரிய விடுவதில்லை.

ஆங்காங்கே வழியில் கற்கலால் ஆன விடுகளைபோல் மேடான பகுதியை காணலாம். அதன் மீது துணிகளால் ஆன தோரனகொடிகள் வீசிக்கொண்டிருக்கும்.

இவை கோவில்கள் அல்ல அந்த பகுதியில் இறந்து போனவர்களின் கல்லரைகள். அவர்களில் உறவினர்கள் அங்கு வந்து அதிக மக்கள் புழக்க மிகுந்த யாத்திரை சமயங்களில் அவர்களுக்கு படையல் படைத்து விட்டு சென்று விடுவார்கள். அங்கு ஊதுபத்தி மற்றும் பூசை சாமாண்கள் இருப்பதை பார்த்து விட்டு விபரம் தெரியா பக்தயாத்திரிகளும் சேர்ந்து கல்லரைகளை ஏதோ கோவில் என நினைத்து பூசை செய்ய அவர்களுடன் வருபவர்களும் இதை தொடர்ந்து செய்ய விபரம் தெரிந்தவர்கள் நகைப்புடன் நகர்ந்து செல்வர்.

என்ன இருந்தாலும் உள்ளூர் வாசிகளின் கல்லரை அல்லவா இவர்களின் ஆண்மாவும் நமது பயனத்திற்கு துணை நிற்கும் என நினைத்து கொள்பவர்களும் உண்டு.
சரியாக மாலை நெருங்கும் வேளை திடீரென மக்கள் பெருந்திராளாக கூடுவர். என்னடா இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வந்தது என்றால் அவர்களும் பக்தர்கள் தான் ஆம் நாம் அடைந்த இடம் சந்தன்வாடி.

இரண்டாம் நிலை தங்குமிடம். இது ஒரு சிற்றூரும் கூட இந்த ஊரின் வருமானமே பக்தர்களில் 45 நாள் யாத்திரையின் போது தான்மற்ற நாட்களில் மலை விவசாயமும்ஆடு மேய்க்கும் தொழிலாளர்களின் வருமாணம் தான். இங்கு மலைபகுதியில் இயற்கையிலேயே கிடைக்கும் லிங்கம் போன்ற கூழாங்கற்கள் கிடைக்கும். 50 ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை டில்லியில் லாலாக்களின் கடைகளின் இந்த லிங்கம் பூசைஅறையில் இருப்பதை நாம் காணலாம்.

இங்கு ஹரியாண பஞ்சாப் எல்லை பகுதியில் அமைந்த ஒரு சிறு கிராமான ஹர்வா என்ற கிராம மக்கள் வருடம் தோரும்  இங்கு வந்து பக்தர்களுக்கு சேவை செய்வர்.
இவர்களிடம் யாத்திரிகளுக்கு தேவையான லங்கர்( சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் உண்டு எல்லாம் இலவசம்) தெரிந்தவர்கள் இவைகளை பெற்று பயனைடைவர் தெரியாதவர்கள் அங்கு இருக்கும் கடைகளில் செலவு செய்து பொருட்களை பெற்று கொள்வர்.

முக்கியமாக குழந்தைகளுக்கான உள்ளாடைகள்(குழந்தைகளுக்கு மட்டும்) பருத்தியாலான ஆடைகள் இலவசமாக கிடைக்கும். பிரஸ்டீஸ் பார்க்காமல் அரை டசன் வாங்கி வைத்து கொள்ளவேண்டும். மலை மேலே இது நமது குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படும். இங்கிருந்து இலவசமாக பெற்று பாதைகளின் ஓரங்களில் விற்பவர்களும் உண்டு. அவர்களிடம் வாங்க வேண்டாம்.

மேலும் இக்கட்டான சூழ்நிலையில் பிறகுக்கு எப்படி உதவ வேண்டும் என்று இந்த சந்தன் வாடி மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டும்.

கம்பளி ஆடைகள் வியாபாரிகள் இங்கு அதிகம் பார்க்கலாம். ஆடைவாங்க நம்மிடம் பணமில்லையா பரவாயில்லை இவர்கள் நமக்கு கொடுத்து விடுவர். நாம் ஊருக்கு வந்ததும் அதற்கு தகுந்த பணத்தை மணியார்டரில் அனுப்பி கொள்ளாலம்.

மேலும் குடி மக்களுக்கு இங்கு ஓர் நல்ல செய்தி உண்டு. சில குதிரை வாலாக்களிடம் நாட்டு சாராயம்,மற்றும் இராணுவத்தினரிடமிருந்து வாங்கிய மதுக்கள் கிடைக்கும். இளைஞர்கள் கூட்டம் இதற்காகவே இவர்களை தேடி அலையும்( அசதி தெரியாமலிருக்க என்று கூறிக்கொள்பவர்கள் உண்டு)

ஆனால் பக்தர்களாய் படியளக்கும் பரமனை வேண்டி செல்பவர்கள் இதை தவிர்க்கலாம்.

சந்தன் வாடி சுமார் 9500 அடி உயரத்தில் உள்ளது. இவ்வளவு உயரத்தில் புகைபிடிப்பவர்களுக்கு நெஞ்சேரிச்சல் புளித்த ஏப்பம் மற்றும் சில உபாதைகள் வர வாய்ப்புண்டு ஆகவே புகைபிடிப்பதை முற்றிலுமே தவிர்த்து விடுவது நல்லது. நாம் முற்றிலும் மறந்து விட ஒரு வாய்ப்பாகவே இதை கருதலாம். நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது.

வாழ்நாளில் ஏசி மற்றும் விலையுயர்ந்த படுக்கையில் இருந்தும் கூட வராத தூக்கம் சந்தன் வாடி கூடாரத்தில் வரும். ஆம் கரடு முரடான அடித்தளம்.
அதற்கு மேல் கோதுமை உமியிலான சாக்குஅதற்க்கு மேல் கம்பளி விரிப்புபோர்த்திக்கொள்ள ரஜோய்( மேத்தை போன்ற கொஞ்சம் மெல்லிய போர்வை) தூக்கம் வராமலா இருக்கும்.

வயிறு முட்ட சாப்பாடு குடும்பம் குழந்தை உறவு வியாபாரம் பணிபோன்ற தொல்லைகள் இல்லை. மனம் முழுவதும் இறை மயம் அவனே எல்லாம் காக்கும் போது நமக்கேதற்கு கவலை. மேலும் மெபைல் சினுங்கள் ஏதுமில்லை இங்கும் டவர் வைக்கும் பணி நடக்கிறதாம். வரும் காலங்களில் மொபைல் தொல்லை வரும்.


 இங்கு அதிகாலையில் ஆட்டு பால் கிடைக்கும் ஆம் மந்தை மக்கள் நமது கூடாரத்திற்க்கு வந்தே நமக்கு முன்பு ஆட்டு மடியில் இருந்து பாலை கரந்து கொடுப்பர். இளஞ்சூடாக மிதமான இனிப்பான பால் சூடு பன்ன தேவை இல்லை அப்படியே குடிக்கலாம். ( மருத்துவத்தின் மீது நம்பிக்கை உடையாவர்கள் பாக்டீரியாமலேரியாநிமொனியா என்று பயப்படுபவர்கள் நன்றாக சூடு செய்து குடிக்கவும் ஆனால் நாம் எதிர்பார்த்த சுவை இருக்காது). 

அங்கிருந்து மூன்று கிமீ தூரம் நடந்தால் வருவது பிச்சு டோப்இது தேளின் கொடுக்கு போல் வளைந்த மலைப்பாதை எனவே இதற்கு இந்த பெயர் வந்தது. இங்கும் சிறிய கேம்ப் உண்டு இளைப்பாறிவிட்டு மேலும் பயணித்தால் சேஸ்பால் என்னும் கேம்ப் வரும் அதன் பிறகு இந்த கேம்ப் அமைந்துள்ள பகுதி



இயற்கை நீறூற்று அதிகம் உண்டு.


கால்களை சில்லிட வைக்கும் நீரோடைகளின் அனுபவம் புதிதாய் செல்பவர்களுக்கு இன்பமான ஒரு அனுபவம்( அழகர் கோவில் செல்லும் நடைபாதையில் மழைக்காலங்களில் வழிந்து வரும் நீரோடை போல்)

அடுத்து வருவது நககோடி (கேம்ப் களின் பெயர்களில் உச்சரிப்புகளில் மாற்றம் வரலாம் தமிழில் எழிதாய் படிப்பதற்கேற்ப மாற்றி உள்ளேன்)

இங்கு ஒரு சிறிய அனுமார் கோவில் உள்ளது. பனிக்கரடி போல் இவரது வாழ்க்கை போலும் ஆம் பக்தர்களின் கூட்டம் ஓயும் வரை இவருக்கு மவுசு அதன் பிறகு மீளாத்துயிலில் மூழ்கிவிடுவார்.

இவர் இராணுவ வீரர்களுக்கு பிடித்த சாமி ஆமாம் இங்கு கிருஸ்தவஇஸ்லாமியபௌத்த என அனைத்து மத இராணுவ வீரர்களும் இவருக்கு விரைப்பான சல்யூட் அடித்து விட்டு பணி ஆரம்பிப்பார்கள்.

அங்கிருந்து சிலமணி நேர பயணத்திற்கு பிறகு நாம் அடைவது மலைகிராமான சேஸ்ஷ்நாகிங்கிருந்து அடுத்த பயணம் நடக்க ஆரம்பிக்க நாம் ஆரம்பத்தில் பார்த்த டோலிகாரர்களில் ஊர் என்றும் சொல்வார்கள் ஆனால் இன்று ஜம்முவின் பல பகுதிகளில் வாழும் மக்க‌ள் வருமானத்திற்காக இந்த தொழிலில் வந்து விட்டனர்.



அடுத்த பயணம் ஆரம்பம் தீவிரவாதிகள் எந்த சிகரத்தில் இருந்து சுடுவார்கள் என்று தெரியாத சூழல்நெடுமலை பயணம் இன்னும் தூரம் செல்ல வேண்டும் என்ற மலைப்பு வேறு என நடை பயணம் சிறிது இறுக்கமாக தெரிந்தாலும் சர்வேஸ்வரனை மனதில் கொண்டு நடைபயனிக்கும் போது பயமெல்லாம் சூரியன் கண்ட பனி போல் விலகி ஓடிவிடுகிறது.

குழுக்களாக செல்லுங்கள் என வழியெங்கும் இராணுவ வீரர்கள் அறிவுருத்தியும் சில இளவட்டங்கள் துணிச்சலாக‌ நீரொடைகளில் தண்ணீர் பிடிக்க செல்கிறேன் என சென்று விட்டு திரும்பி வராமல் போய்விடுவார்கள். ஒன்று பாதை மறந்து விடுவது. காரணம்! அனைத்து மலை சிகரங்களும் ஒன்று போல் தெரிவது

மற்றோன்று காட்டு விலங்குகள். அதைவிட தீவிரவாதிகள். ஆகவே மனதில் கொள்ளவேண்டும் அனைவரும் ஒன்று பட்டே பயணிக்க வேண்டும்.

அடுத்து நாம் அடைவது வார்பல் எனப்படும் செயற்கை கேம்ப்இங்கும் சிறிந்து இளைப்பாறிவிட்டு நமது பயணம் தொடரும். நமக்கு கண்முன் தெரிவதெல்லாம் மலை உச்சியில் தூர எறும்பு போல் சாரை சாரையாய் ஊர்ந்து செல்லும் மணித கூட்டம். நாமும் அங்குதான் செல்லவேண்டும் என்ற மலைப்பும் ஆவலும் கடந்து நமது நடை பயணத்தை வேகபடுத்துகிறது.


பல கிலோமீட்டர் இதமான சூழலில் நாம் அனைவருடனும் கலந்து செல்ல செல்ல மலை உச்சியில் ஏறிய களைப்பே இல்லாமல் போய்விடுகிறது. ஆம் நீங்கள் கடல் மட்டத்தில் இருந்து 14500 மீட்டர் உயரத்தில் இருக்கிறீர்கள் என்ற அறிவிப்பை பார்த்ததும். உலகத்தின் உச்சியில் இருப்பதை போன்ற ஒரு மலைப்பு நமக்கு நமக்கும் உச்சியில் ஒருவன் இருக்கிறான் என்ற தவிப்பும் ஒருபக்கம். அவனை கான த்தானே இந்த பயனம்.

மேகாகன் ஸ்டாப் என்ற கேம்ப் இந்த மலை உச்சியில் உண்டு இங்கு முதலுதவிக்கான அனைத்து உபகரணங்களும் இரானுவ மருத்துவர்களும்,செவிலியர்களும் உண்டு.

குணசேகரன் என்ற இராணுவ மருத்துவர் நாகர்கோவில்காரர் அந்த ஏங்கோ ஒரு தூரத்தில் உள்ள மலை வாழிடத்தில் சேரலத்து தமிழை கேட்டு புல்லரித்து போய்விட்டோம்.


சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரலான் நாட்டிளம் பெண்களுடனே என்ற பாரதியின் பாடல் நினைவிற்க்கு வருகிறது. ஆம் செவிலியர்கள் பலர் சேரலநாட்டினர்
(மலையாளிகள்)

இங்கு உணவு உட்கொண்ட பின் நமது பயணம் தொடர்கிறது.


அடுத்து நாம் அடையும் இடம் பபிபால்(பாவ விமோசனமையம் ஆம் இது மலையின் உச்சி சிகரம்.இங்கு நமது கொடியை ஊன்றலாம் ஆம் இதுவும் ஒரு சிகரம் தானே.
இவ்வளவு உயரத்தில் மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள்தோன்றலாம் மருத்துவ குழு இங்கு உள்ளது அவர்களிடம்வேண்டிய பிகாம்பளக்ஸ் மாத்திரைகள் கிடைக்கும் வாங்கி சாப்பிட்டு கொண்டால் ஈறுகளில் இரத்தம் வடியும் தொல்லை வராது.

இங்கிருந்து இறக்கம் ஆம்சுமார் ஆறுகிலோ மீட்டர் தூரம் நாம் செல்லும் பாதை நமக்கு எளிதாக தெரிகிறது திரும்பி பார்த்தால் மறுபுரம் நாம் வந்த பாதையும் தெரியும் கொஞ்சம் மலைத்து விட்டு விறுவிறு என  இறங்க வேண்டியது தான் வந்த பாதையிலேயே அழகான பாதையிது.

ஆம் பசும் போர்த்திய அழகிய பாதை செறுப்பேதேவையில்லை எனலாம் அந்த அளவு அழகானது.சில செறுப்புகளை கைகளிலெடுத்து கொண்டு நடப்பது தெரிகிறது. மனதில் துணிச்சல் இருந்தால் நீங்களும் செறுபின்றி நடக்கலாம்.

வழியில் பல ஒற்றையடிப்பாதைகள் வரும் சிலர் சித்தர்கள் முனிகள் வந்த பாதை என்று கதை விடுவார்கள். அதெல்லாம் இல்லை இது நாங்கள் தினமும் வரும் பாதை என தூரத்தில் மேயும் ஆடுகள் உறுதி படுத்தும். இந்த இறக்கத்தில் பனி எருதுகள் திபெத்திய கழுதைகள் சில நேரங்களில் மான்கள் என நமக்கு காட்சி தரும். காமிராவை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

பற்கள் நமது உறுதியையும் மீறி தாளமிடுகிறது குளிரில் வேகமாக நடக்கும் போது கிடைக்கும் உடல் சூட்டையும் மீறி நம்மை உலுக்கும் குளிர் இறங்கும் பாதையாதலால் நாம் விரைவாக பஞ்தரனி என்ற கேம்பை அடையலாம். இங்கும் சந்தன் வாடியில் கண்டசனத்தொகை போல் மக்கள் வெள்ளம்.

இங்கு போஸ்ட் ஆபீஸும் உண்டு கையில் பென்சில் பேனா பேப்பர் கொண்டு வந்தால் இந்த காட்சிகளை எழுதி நமது ஊருக்கு அனுப்பலாம் நாம் திரும்புவதற்குள் அவை போய் சேர்ந்திருக்கும்.

இங்கு தங்கி தூங்கி எழுந்த பின் அடுத்து நாம் வருவது சங்கம்( கூடுமிடம்) என்னும் ஊர் ஆம் படால் என்னும் வேறு பகுதியில் இருந்து வந்தவர்களும் பாகல் காவிலிருந்து வந்தவர்களும் இங்கு கூடுவர்.

இங்கு சந்தைகாடான இரைச்சல் குகைடிரஸ்டால் அமைக்க பட்ட சிறப்பு கேம்ப் இங்குள்ளது.

இங்கிருந்து கிளம்பிய பிறகு நாம் இன்னும் இரண்டு மணிநேரம் தான் லிங்கேஸ்வரனை அடைந்து விடலாம் என்ற டோலிகளின் பேச்சு நமக்கு காதுகளில் இனிமையான செய்தியாகும்.




லிங்கேஸ்வரனை காண நெருங்க நெருங்க வந்த களைப்பு போய் ஆர்வம் தான் மிகுகிறது. தூரத்தில் எறும்பு போல் மனித கூட்டம் ஊறும் காட்சி தூர மலை சாரலில் ஒரு சிறு குகைபோல் தெரியும் ஒரு ஓட்டைக்குள் எல்லாம் சென்று திரும்பும் காட்சி அதுதாம் குகை என்றதுஇங்கிருந்தே பக்தர்களின் காரகோசம் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது.

பழனி செல்லும் போது ஓட்டன் சத்திரத்தை தாண்டியது தெரியும் பழனிமலை வாசனின் ஓம் என்னும் எழில் எழுத்தை கண்டது அரோகாரா என தன்னை அறியாமல் வரும் வார்த்தையை போல்

வரிசை நகர நகர குகை நமக்கு பிரம்மாண்டமாய் தெரிய ஆரம்பிக்கிறது. ஆம் சில மணி நேரத்திற்கு முன் பார்த்த சிறு குகை அண்டத்தியே விழுங்கிவிடும் பேரண்டமாய் தெரிகிறது “.


இதோ நாம் நெருங்கி விட்டோம்  இதோ நாம் நுழைந்து விட்டோம் குகைவாயிலில் அங்கே பக்தர்களுக்கு அதிகம் உதவுபவர்கள் பூசாரிகளோ,பண்டிதர்களோ இல்லைஆம் இங்கே நாமே இறையானை ஆராதிக்கலாம்.

மனம் குளிர தரிசிக்கலாம். இராணுவ வீரர்கள் நம்மை அமைதியாக செல்லும்படியும் முன்னால் இருப்பவர்களை தொந்திரவு செய்யாமல் அவர்கள் தரிசனம் செய்யும் வரை காத்திருந்து நீங்கள் தரிசனம் செய்யுங்கள் என்று அன்பான கட்டளை யிட்டு கொண்டிருக்க முன்னோர் விலகியதும்.

நமக்கு சுயரூபம் காட்டும் கயிலையோன்.

ஆம் நம்மால் கண்ணீரை அடக்க முடியவில்லை,உடல் நடுங்குகிறது. ஆம் அண்டத்தை அரசாளும் நீலகண்டன் அங்கேஅணுவிலும் அணுவாக அல்ப பிண்டமாய் நாம் அவன் முன்னே.



இங்கே ச‌ல‌க‌ண்டி சொல்லி யாருமில்லை,ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழிவிட்டு ஒரு ஓர‌த்தில் நின்று நாள் முழுவ‌தும் அவ‌னை பார்த்து கொண்டிருக்க‌லாம். ஆம் இத‌ற்க்காக‌த்தானே இத்த‌னை இன்ன‌ல்க‌ள்நொடிய‌ குளிர் ம‌லைப்ப‌ய‌ண‌ம்.

இங்கே வி ஐ பி வ‌ரிசை இல்லைஆம் இவ்வ‌ள‌வு இன்ன‌ல்க‌ளை க‌ட‌ந்து இவ‌னை காண‌வ‌ந்த‌ நாமே சிவ‌ணுக்கு வி வி ஐ பிஇங்கு யார் பெரிய‌வ‌ன் என்ற‌ போட்டி வைத்தால் உண்மையில் ந‌ம் முன் அமைதியாக‌ வெண்ப‌னி திட்ப‌த்தில் ஒளிர்ந்திருக்கும் இறையோன் பெரியோன் அல்ல‌ அப்ப‌டி யெனில்

ஔவை த‌ன‌து வாக்கில் சொல்வார்

பெரிய‌து புவ‌ண‌ம்புவ‌ண‌ம் பிர‌ம்மாவின் ப‌டைப்பு,
பிர‌ம்ம‌னோ திருமாளின் தொப்புளில் பிற‌ந்த‌வ‌ன்,
திருமாளோ பாற்க‌ட‌லில் துயில்ப‌வ‌ன்,

பாற‌க‌ட‌லை ஒத்த‌ அனைத்துகடலும்
அகத்தியனின்  கையில் அட‌க்க‌ம்

அந்த‌ சிறு முனியோ சிறிய‌ க‌ல‌ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ன்,
க‌ல‌ச‌ம் இந்த‌ பூமியின் சிறு ம‌ண் குவிய‌ல்

இந்த‌ பூமியோ ஆதிசேச‌னின் ஒருத‌லையின் சிறு பாக‌ம்,

ஆதிசேனோ உமைய‌வ‌ளின் சிறுவிர‌ல் மோதிர‌ம்

உமைய‌வ‌ளோ அப்ப‌னின் உட‌லில் ஒரு பாதி ஒருங்கியவள்

என் அப்ப‌னோ தொண்ட‌னில் உள்ள‌த்தில் அட‌ங்குப‌வ‌ன் ”

இந்த‌ கூற்றுத்தான் இன்றுவ‌ரை இறைவ‌னை நோக்கி ம‌னித‌னை அழைக்கிற‌து. ம‌னித‌னும் த‌ன்னிலை உண‌ர்ந்து இறைமைதான் பெரிதென்று உண‌ர்கிறான்.

அப்ப‌டி அனைவ‌ரும் உண‌ரும் போது உல‌கில் அமைதி நில‌வும்இந்த‌ இடைக்கால‌த்தில் ம‌னித‌பேத‌ம் பார்க்கும் ம‌னித‌ர்க‌ள்நான் தாம் பெரிய‌வ‌ர் என‌ இறுமாப்பு கொள்ப‌வ‌ர்க‌ள்அனைத்தும் என‌க்கே என‌ உரிமை கொள்ப‌வ‌ர்க‌ள்ப‌லாசாலி என‌ ப‌றை சாற்றுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் கால‌ச்சூழ‌லில் காணாம‌ல் போய்விடுவ‌ர். உல‌கில் தோன்றிய‌ ம‌த‌ங்க‌ள்ம‌த‌ போத‌க‌ர்க‌ள் ந‌ம‌க்கு அறிவுருத்துவ‌தும் இதைத்தான் உண‌க்கு மேல் ஒன்று உண்டு அதை க‌வ‌ண‌த்தில் உண‌க்கு கிடைத்த‌ இம் ம‌னித‌ பிற‌ப்பை பிற‌ருக்கு உத‌வ‌ குறிக்கோள் கொண்டிரு.

அம‌ர்நாத் இந்துக்க‌ளுக்கு ம‌ட்டும் சொந்த‌ம் என‌ என்ன‌ வேண்டாம். புராண‌ங்க‌ளில் அம‌ர‌ த‌த்துவ‌த்தை உமைய‌வ‌ளுக்கு அளித்த‌ இட‌ம் என்று எழுதியிருந்தாலும் இந்த‌ குகை 16 ஆம்,

                 நூற்றாண்டில் க‌ண்ட‌றிய‌ பட்ட‌து.

“:இஸ்லாமிய‌  குடும்ப‌த்தை சேர்ந்த‌ ஒருவ‌ர் ம‌லையில் ஆட்டு கூட்டத்தை மேய்த்து கொண்டு செல்லும் போது பாதை த‌வ‌றிவிட்டார். தூர‌த்தில் தென்ப‌ட்ட‌ இந்த‌ ம‌லைக்குகைக்குள் நுழைந்த‌ போது வெண்ணிற‌ ஆடை அனிந்த‌ துற‌வி ஒருவ‌ர். இவ‌ருக்கு மீண்டும் ஊருக்கு திரும்ப‌ வ‌ழி காட்டிய‌ தாக‌வும்அத‌ன் பிற‌கு அந்த‌ இஸ்லாமிய‌ர் வாழ்வில் எல்லா வ‌ள‌மும் பெற்று வாழ்ந்த‌ தாக‌வும் குறிப்பு உள்ள‌து. மேலும் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் ப‌ர‌ம்ப‌ரை தான் இன்றும் அந்த‌ குகையை நிர்வாகித்து வ‌ருகிற‌து.



குகைக்கு வ‌ரும் 100 ப‌க்த‌ர்க‌ளில் 30 பேர் இஸ்லாமிய‌ர்க‌ள்இவ‌ர்க‌ளும் லிங்க‌ நாத‌ரை த‌ரிச‌ன‌ம் செய்கின்ற‌ன‌ர். ஆம் இவ‌ர்க‌ள் லிங்க‌ நாத‌னுக்கு வைத்த‌ பெய‌ர் ப‌ர‌ப்பானி பாபா(ப‌னிக‌ட்டி பாபா)

மேலும்ப‌க்த‌ர்க‌ளுக்கு ம‌லை ஏற்ற‌ துவ‌க்க‌த்தில் இருந்து மீண்டும் இற‌ங்கும் வ‌ரை ந‌ம‌க்கு ந‌ல் உற‌வாக‌ இருந்து உத‌வுவ‌தும் இஸ்லாமிய‌ர்க‌ள் தான். இப்ப‌டி ம‌த‌ ந‌ல்லின‌க்க‌த்திற்காக‌வும் ஒரு பால‌மாக‌ இருக்கும் அம‌ர்நாத் யாத்திரைக்கு ம‌த‌ ந‌ம்பிக்கை இல்லேதோரும்இய‌ற்கை இர‌சிக்கும் ஒரு சுற்றுலாவாக‌ கொண்டு கிள‌ம்ப‌லா

funny

ngobikannan

ngobikannan

ngobikannan